மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு…..! ஒரே குடும்பத்தை சார்ந்த அதிரடி கைது….!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இருந்தாலும் கூட அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் சில மர்ம நபர்கள் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் பணிகளில் காவல்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது

அந்த வகையில், கோவை வடக்கு மாநகர காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில் ஆர் எஸ் புரம் காதல் சரக கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனி படை ஒன்று அமைக்கப்பட்டு, இதுகுறித்து புலன் விசாரணை செய்யப்பட்டது.

அதனை அடிப்படையாக வைத்து கோவை மாநகரத்தில் பல பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர்( 26) கன்னையா (30) பார்வதி (67) முத்தம்மா (23) கீதா (24) உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றன.

இதில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்னவென்றால் இந்த ஐவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேர் மீதும் கோவை மாநகரத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்தமாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, இவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட வயதான தம்பதி….! பெரம்பலூர் அருகே பரபரப்பு….!

Wed Feb 1 , 2023
தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதை பார்த்தால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அனைவரும் தூக்கில் தான் தொங்க வேண்டும் என்ற ஒரு பேச்சு தமிழக மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. அந்த அளவிற்கு தங்க நகையின் மவுசு அதிகரித்துவிட்டது. இந்த தங்க நகையின் மவுசு அதிகரித்ததை தொடர்ந்து, பல்வேறு அசம்பாவிதங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(80) இவருடைய […]
murder

You May Like