தேவையான பொருட்கள்;
கோழி – 1 கி
நல்லெண்ணெய்- 3 டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 3 டீ ஸ்பூன்
வெங்காயம்- 3
மஞ்சள் பொடி – ½ டீ ஸ்பூன்
வறுத்து அறைக்க;
முழு மிளகு – 2 டீ ஸ்பூன்
சீரகம் – 1 ½ டீ ஸ்பூன்
சோம்பு – 1 ½ டீ ஸ்பூன்
வரமிளகாய் – 5 டீ ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் – 3 டீ ஸ்பூன்
முழு மல்லி – 2 டீ ஸ்பூன்
செய்முறை:
மேல்கூறிய பொருட்களை அடுப்பில் கடாய் வைத்து குறைவான தீயில் பொன்னிறமாக வருத்து பொடி செய்துகொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மணம் வரை வதக்கியப்பின் கழுவி சுத்தம் செய்த கோழியை அதில் போட்டு வதக்கவும். வெட்டிவைத்த வெங்காயத்தை எண்ணத்தில் பொன்னிறமாக வறுத்து ஆறியபின் மிக்சியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை வதங்கிய கோழியில் சேர்த்து நன்றாக திருப்பி விட்டு கிளறி, மஞ்சள் பொடி சிறிதளவு சேர்த்து வதக்கி தேவையான உப்பும் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா பொடிகளை சேர்த்து சிறிது நேரம் திறந்து வைத்து வதக்கி மசாலா கோழியில் சேர்ந்ததும் சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்து கிரேவி பதம் வரும் வரை சுருள கிளறி விடவும் கடைசியில் மல்லி இலை தூவி இறக்கினால்பெப்பர் சிக்கன் தயார்!