பனங்கற்கண்டு பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இந்த பன்னக்கற்கண்டை பாலில் கலந்து தினமும் இரவில் குடித்துவர மூளையின் செயல் திறனை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இழந்த சக்தியை மீட்டு தருகிறது, நாட்பட்ட நெஞ்சுச்சளியை போக்குகிறது, நல்ல உறக்கம் கிடைக்கும், செரிமான கோளாறு குணமடையும். நுரையீரல் சுத்தமடையும்.
தேவையான பொருட்கள்: பால் – 1 /2 லிட்டர், பனங்கற்கண்டு – 1 கப், கருப்பு மிளகு – 1 டீ ஸ்பூன், ஏலக்காய் – 8 இவை மூன்றையும் நன்கு காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ளவும். அரைத்த பொடியை ஈரமில்லாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும.
செய்முறை : பாலை காய்ச்சி அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்த பவுடர் கற்கண்டை மூன்று ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலக்கவும் நன்கு கொதிக்கவிட்டு பாலை வடிகட்டி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். குறிப்பு : சளி பிரச்சனைகளை தீர்க்க இதை விட ஒரு சிறந்த ருந்து இல்லை.