கடந்த 2021 ஆம் ஆண்டு நீடாமங்கலம் கடைவீதியில் தலை துண்டிக்கப்பட்டு சிபிஐ கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் விதத்தில், திருவாரூர் அருகே இருக்கின்ற கமலாபுரம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வளரும் தமிழகம் கட்சியின் பிரமுகர் ராஜ்குமாரின் காரின் மீது எதிரில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு 8 பேர் கொண்ட மர்மகும்பல் பூவனூர் ராஜகுமாரை வெட்டி படுகொலை செய்தது. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு 12 மணி நேரத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆகவே வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலின் போது ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மேற்பட்ட காவல்துறையினர் அந்த பகுதியில் குதிக்கப்பட்டனர்.