நேற்றைய தினம் சிவகங்கையில் நடந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரை எடப்பாடி பழனிச்சாமி பி டீமை வைத்து அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார் அவர் பி.டீம் என்று மறைமுகமாக பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் கருணாநிதியாலேயே அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. இவரால் என்ன செய்துவிட முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். தற்போதைய ஆட்சியில் லஞ்சம், ஊழல், கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளனர் நான் சர்க்கரை வியாபாரியாக இருந்தவன்.
நல்லவல்லம் தமிழகத்திலேயே பல இடங்களில் கிடைக்கும்போது ஊழல் செய்வதற்காக வெளி மாநிலங்களில் இருந்து வெல்லத்தை கொண்டு வர செய்து மக்களுக்கு ஒழுகும் வெல்லத்தை வழங்கினார் என்று குற்றம் சுமத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவராகவும், முதலமைச்சராகவும் இருந்து மக்களை பார்க்கிறார் நான் தொண்டனாக இருந்து மக்களை பார்க்கிறேன். தலைவர் முக்கியம் இல்லை தொண்டன் தான் முக்கியம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை முடக்கியது தான் ஸ்டாலினின் சாதனை. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலனை நாங்கள் வழங்கினோம். ஆனால் அதிமுக ஆட்சியில் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.