தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிசிடிவி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரை திடீரென அப்பகுதிக்கு வரும் ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்து முத்தம் கொடுக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டத்தில் நடைபெற்று இருக்கிறது.
ஜமுய் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவருக்கு தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதுவும் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண்மணி மருத்துவமனை வளாகத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்து வந்த ஒரு நபர் அந்தப் பெண்மணி எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண்மணி கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை அந்த சீரியல் கிஸ்ஸரை தேடி வருகிறது. மேலும் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை எனவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மருத்துவமனையின் பாதுகாப்புகளை அதிகரிக்கவும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.