தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அந்தவகையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையை உத்தரவுபடி, டாஸ்மாக் மற்றும் […]

பட்டப் பகலில் பரபரப்பான வீதியில் இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பீகாரின் நவதா மாவட்டத்தில் பரபரப்பான சாலையில் 20 வயது இளைஞர் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது முகத்தில் மிளகாய் […]

பாஸ்போர்ட் சோதனைக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் தலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரை சேர்ந்த பெண் அங்குள்ள கோட்வால் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரி […]

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கி விட்டு சிறையிலிருந்த மூன்று கைதிகளை அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்கா மாவட்டத்தில் உள்ள நேபா நகரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்து மூன்று பேரை அழைத்துச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி […]

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்ததால் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சீர்காழியில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு அரசு அலுவலகங்களும் இருப்பதால் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு இது ஒரு மையமாக விளங்கி வருகிறது. சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் சோழா இன் என்ற தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து […]

தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிசிடிவி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரை திடீரென அப்பகுதிக்கு வரும் ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்து முத்தம் கொடுக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள […]

நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்திருந்தால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. டெல்லியைச் சார்ந்த தெரு நாய் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரு நாய் ஒன்றைப் பிடித்து பாலியல் பலாத்காரம் […]

அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நாய், தாய் அருகே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோகி மாவட்டத்தைச் சார்ந்தவர் மகேந்திர மீனா. இவருக்கு ரேகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

மது போதை தலைக்கேறியதால் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தேனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கேறி விட்டால்  கை கால் புரியாது என கேட்டிருப்போம். ஆனால் அது போன்ற ஒரு  நிகழ்வு தேனி பகுதியில் அரங்கேறி இருக்கிறது. போதை தலைக்கு எறியதால் ஆடைகள் இன்றி  சாலைகளில் சுற்றி திரிந்த ஒரு நபரால் தேனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. […]