எல்லாம் ரெடியா…? வரும் 19-ம் இவர்கள் அனைவருக்கும் தேர்வு…! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள 5.20 லட்சம் கற்போர்கள் பயனடையும் வகையில் 28, 848 கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் சுற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது மார்ச் 19-ம் தேதி இத்திட்டத்தின் கற்போர் அனைவருக்கும் அவரவர் சார்ந்த கற்போர் மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு அரசின் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில் பதிவு செய்து பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டக் கற்போர் மையங்கள், வட்டார வளமையம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் மேனேஜர் போஸ்ட்டுக்கு ₹54,166/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

Sat Mar 18 , 2023
ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ரெப்கோ நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர், மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் ஆகிய பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ஒன்பது காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்காக தற்போது தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. […]
IMG 20230318 WA0001

You May Like