அனைத்து திட்டத்திற்கும் நேரடியாக வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம்…! மத்திய அரசு

சிறுபான்மையினர் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அறிவிக்கப்பட்ட 6 சிறுபான்மையினர் சமுதாயங்களின் நலனுக்காக நாடு முழுவதும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களது சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


திறன் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளித்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் மூலம் சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் மற்றும் விளிம்பு நிலை சமூகத்தினரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அதிகமுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு, மாநில அரசுகளின் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 2022-23ம் நிதியாண்டில் இதன் நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதிப் பலன்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய அவர்களது வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் முறையில் பணம் செலுத்தப்படுகிறது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உஷார்...! தமிழகத்தில் 22-ம் தேதி வரை மழை தொடரும்...! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!

Sun Mar 19 , 2023
தமிழகத்தில் 22-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில். இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று […]
Rain 3

You May Like