தலைநகர் டெல்லியில் பிட்காயின் மூலம் இரட்டிப்புலாபம் கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனியார் வங்கியைச் சார்ந்த மேலாளர் ஒருவரளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களில் ஒருவர் ஜதீன்குமார் டால்(28) இவர் டெல்லியின் ரோகினி செட்டார் 28ல் வசித்து வருகிறார். மற்றொருவர் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சார்ந்த அன்சுல் அரோரா(33). இவர்கள் இருவரும் டெலிகிராம் மூலமாக மக்களிடம் பிட்காயினில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் எனக்கூறி பண மோசடி செய்து வந்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
டெல்லியை சார்ந்த தனியார் வங்கி மேலாளர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தன்னை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் பிட்காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்குமென கூறினார். அதனை நம்பி நானும் 95 ஆயிரம் ரூபாய் முதலில் முதலீடு செய்தேன். அதற்கு 250000 ரூபாய் எனக்கு கிடைக்கும் என கூறினார். என்னுடைய லாபத்தொகை எனக்கு கிடைக்கவில்லை. இதனைப் பற்றி அந்த நபரிடம் விசாரித்த போது மேலும் முதலீடு செய்யுங்கள் மொத்தமாக லாபம் கிடைக்கும் என்று என்னிடம் தெரிவித்தார். அப்போது அவர்கள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகாரளித்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த நபர்கள் டெல்லியில் உள்ள நகை கடையின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு செய்திருக்கிறார்கள். நகை கடையில் விசாரித்த போது அரோரா மோதிரம் வாங்குவதற்காக அந்தத் தொகையை வங்கி கணக்கிற்கு செலுத்தியதாக தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. காவல்துறையினர் அவர்கள் வீட்டை சோதனை செய்தபோது முக்கிய ஆதாரமான செல்போனை தீயில் போட்டு எரிக்க முயற்சித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள காவல் துறை அவரிடம் இருந்து ஆறு செல்போன்கள் போலி வங்கி கணக்குகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளது. தீயில் கருகிய செல்போனும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதிலிருந்து தகவல்களை எடுப்பதற்காக தடையவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.