புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே இருக்கின்ற கணுவா பேட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். மேலும் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று செந்தில்குமார் மீது வெடிகுண்டை வீசி சென்றது.
இதனால் நிலைகுலைந்த அவரை அந்த கும்பல் மீண்டும் திரும்பி வந்து கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்டவற்றால் சரமாரியாக வெட்டி இருக்கிறது. இந்த சம்பவத்தால் ரத்த வளத்தில் சரிந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இந்த சம்பவம் குறித்து பில்லியன் ஒரு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். பேக்கரியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து குற்றவாளிகள் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது ஆகவே அந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.