மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தைக்கு வீடியோ கால் செய்து அவரது கண்முன்னே மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா பகுதியைச் சார்ந்தவர் சுபேதார் ராவ்ஜி பாட்டீல் இவரது மகள் ஐஸ்வர்யா வயது 28. ஐஸ்வர்யாவுக்கும் மும்பையைச் சார்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா தனது கணவருடன் நவீன் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கணவர் குடும்பத்தினர் புது வீடு வாங்குவதற்காக ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரது கணவருக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது அந்தப் பெண்ணும் ஐஸ்வர்யாவை அவதூறாக பேசி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலிலிருந்த ஐஸ்வர்யா தனது தந்தைக்கு வீடியோ கால் செய்து அவருடன் பேசயிருக்கிறார். தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது கண்முன்னே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார் ஐஸ்வர்யா. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஐஸ்வர்யாவின் கணவர் லட்சுமணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஐஸ்வர்யாவை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால் இவரது அழைப்பை லட்சுமணன் எடுக்கவில்லை. இதன் காரணமாக தந்தையின் கண் முன்னே வீடியோ காலில் தூக்கு போட்டு பரிதாபமாக உயிரிழந்தார் ஐஸ்வர்யா. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.