fbpx

அதிரடி…! 9 முதல் 12-ம் மாணவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்…! முழு விவரம் உள்ளே…

மாணவர்கள் உதவித் தொகை பெற கட்டாயம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம்‌ கல்வியாண்டில்‌ 9ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை கல்வி பயிலும்‌ ஆதிதிராவிடர்‌ / பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர்‌ மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணாக்கர்களின்‌ வங்கி கணக்கு எண்‌, ஆதாருடன்‌ இணைக்கப்படுவது கட்டாயமாகும்‌.

தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த கல்வியாண்டில்‌ உதவித்தொகை பெற்ற மாணாக்கர்களில்‌ பெரும்பாலான மாணாக்கர்களின்‌ வங்கி கணக்குகள்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்படாமல்‌ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாணாக்கர்கள்‌ தங்களுடைய வங்கி கணக்கு எண்ணை ஆதாருடன்‌ இணைக்க வேண்டும்‌.

மேலும்‌ வங்கி கணக்கு பயன்பாட்டில்‌ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌. புதிதாக கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள்‌ போஸ்ட்‌ ஆபிசில்‌ கணக்கு எண்‌ தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்‌ இதற்காக பள்ளிகளில்‌ சிறப்பு முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில்‌ நடைபெறும்‌ சிறப்பு முகாம்களில்‌ மாணாக்கர்கள்‌ ஆதார்‌ எண்‌ மற்றும்‌ தொலைப்பேசி எண்‌ ஆகியவற்றை சமர்ப்பித்து அஞ்சல்‌ அலுவலகத்தில்‌ வங்கி கணக்கு எண்‌ துவங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மகளிருக்கு குட் நியூஸ்...! 21 நாளில் சுய உதவி குழு கடன் வழங்கப்படும்...! அமைச்சர் தகவல்...!

Wed Mar 29 , 2023
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 21 நாட்களில் கடன் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாமக எம்‌.எல்.ஏ ஜிகே மணி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கிக்கடன் பெற மாதம் ஆறு முறை […]

You May Like