இன்ஸ்ட்டா ல ரீல்ஸ் போடுவதில் பிஸியாக இருந்த 9 வயது சிறுமி! தந்தை படிக்க சொல்லி வற்புறுத்தியதால் தற்கொலை!

திருவள்ளூர் அருகே இன்ஸ்டா புகழ் சிறுமி தனது பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவியின் பெயர் கற்பகம். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவர்களது இளைய மகள் பிரதிக்ஷா ஒன்பது வயதான அந்தச் சிறுமியை அங்குள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இந்தக் குழந்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் . இன்ஸ்டாகிராம் பிரதிக்ஷா என்றால் தான் தெரியும் அந்த அளவிற்கு திரைப்படப் பாடல்களுக்கு தனது அசைவின் மூலம் புகழ்பெற்றவர் பிரதிக்ஷா.


இந்நிலையில் நேற்று இரவு பிரதிக்ஷா தனது பாட்டியின் வீட்டு அருகே நின்று விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார். அங்கு வந்து அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. ஏன் படிக்காமல் எந்நேரமும் விளையாட்டு விளையாட்டு என்னை சுற்றிக் கொண்டிருக்கிறாய்? என அவர்கள் கண்டித்து இருக்கின்றனர். பின்னர் மகளை கண்டித்து விட்டு அவர்கள் வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தங்களது மகள் பிரதிக்ஷா தூக்கில் தொங்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

’அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள்’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு..!!

Wed Mar 29 , 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மடத்துக்குளம் எம்.எல்.ஏ. மகேந்திரன், மடத்துக்குளத்தில் காதி பவன் கிளை அமைக்க அரசு ஆவண செய்யுமா எனவும், அந்தப் பகுதியில் சுற்றுவட்டார கிராமங்களில் நெசவாளர்கள் சிறு குறு தொழில் செய்பவர்களாக உள்ளதால், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் காதி பவன் கிளைகளை அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ”தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் கிராம தொழில் […]
202111071630320830 Rain damage in Chennai 15 IAS officers appointed SECVPF

You May Like