மணப்பாறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிந்து விடுவதாக மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி என்ற இடத்தைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் . அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரை முகநூலில் புகைப்படத்தை பதிவேற்றி விடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி வந்திருக்கிறார். அந்த மாணவியும் இவரது மிரட்டலுக்கு பயந்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக இந்த கொடூர செயல் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இந்நிலையில் அந்த நபரின் கொடுமை தொடர்ந்து கொண்டே இருந்ததால் பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் மணப்பாறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை புகைப்படத்தை பதிவிடுவதாக மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்த சம்பவம் அப்பகுதியில் பெற்றோர்களுடைய அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. இவற்றிற்கு எதிராக கடுமையான சட்டங்களும் நடவடிக்கைகளும் தேவை என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.