fbpx

அதிமுகவின் பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு….! எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மனு இன்று விசாரணை…..!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவிற்கு பின்னர் அந்த கட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு மறுபடியும் பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அதிமுக தரப்பு அனுப்பி வைத்திருக்கிறது. அதோடு, கர்நாடக மாநில தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்குகள் காரணமாக, அதிமுகவில் கட்சி ரீதியான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத காரணத்தால், வேட்பாளர்களை நிறுத்துவதில் அதிமுக தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் அதிமுகவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வடக்கு நீதிபதி பிரதீப் எம் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

Next Post

தமிழகத்தில் கொரோனா.. மக்கள் பயப்பட வேண்டாம்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்..

Mon Apr 10 , 2023
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் 6,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை […]
வடமாநில மாணவர்களால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..! அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!

You May Like