ஓரின சேர்க்கை திருமணம் அங்கிகாரம் வழங்கும் சட்டம்…! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்…!

ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கிகாரம் குறித்து கருத்துக்களை கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.


அதில், ஒரே பாலின திருமணத்தை நாட்டின் நெறிமுறை மற்றும் சமூக ஒழுக்கமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் இந்து திருமண சட்டம் 1955, கிறிஸ்தவ திருமண சட்டம் 1872, பார்சி திருமணம் மற்றும் விவகாரத்துச் சட்டம் 1936, சிறப்பு திருமண சட்டம் 1954, வெளிநாட்டுத் திருமண சட்டம் 1969 ஆகியவை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை தான் அங்கீகரிக்கின்றன.

திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் நடக்க வேண்டும் என சட்டங்கள் சொல்கின்றன. ஒரே பாலின திருமணத்தை பதிவு செய்வது சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் குடும்ப அமைப்புகளை தாண்டி, இதுபோன்ற திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கூடாது. எனவே, ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்களை ஏற்க கூடாது என தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஏப்ரல் 18ம் தேதி முதல் தொடர்ச்சியாக மனுவை விசாரித்து வருகின்றனர்.

மனுக்களில் எழுப்பப்பட்ட முக்கியமான பிரச்சினை குறித்த கருத்துக்களை கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணங்களுக்கு இடமளிக்கும் வகையில் சிறப்பு திருமணச் சட்டத்தின் வரம்பை விரிவுபடுத்த முடியுமா என்பதை ஆராய்வதற்கு நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.

Vignesh

Next Post

தென்‌தமிழக மாவட்டங்களில்‌ இன்று மழைக்கு வாய்ப்பு...! 22, 23 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய மழை...!

Thu Apr 20 , 2023
தென்‌தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இன்று லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளி மண்டலத்தின்‌ கீழடுக்குகளில்‌ கிழக்கு திசை காற்றும்‌, மேற்கு திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று தென்‌தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழைபெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ […]
Rain

You May Like