நாடு முழுவதும் கடந்து சில வாரங்களாக நோய்த்தொற்று வாய்ப்பின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது நாள்தோறும் 10,000 அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இத்தகைய நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், ரவீந்திரா பட், ஜேபி பார்தி வாலா, மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தன்பாலின திருமணம் குறித்த வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் ஒருவராக இருப்பவர் நீதிபதி ரவீந்திர பட் இந்த வழக்கும் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிப்பை சந்தித்து இருக்கிறது அதேபோல மற்ற நீதிபதிகள் விசாரித்து வந்த வழக்குகளும் வேறு நீதிபதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான சஞ்சய் கிருஷ்ணன் கவுன் உடல்நிலை காரணமாக, திங்கள்கிழமை நீதிமன்றத்திற்கு வரமாட்டார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே நீதிபதி சூரியகாந்த் நோய் தொற்றிலிருந்து சென்ற வாரம் மீண்டு வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.