இன்று கோவை உள்ளிட்ட 8 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு…!

கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்று காரணமாக இன்று 8 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், வேலூர்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது‌. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய,லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் பெய்யவிருக்கும் கனமழை…..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை……!

Sun Apr 30 , 2023
இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று உள்ளிட்டவை சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது ஆகவே தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி காணப்படுகிறது. ஆகவே இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பல்வேறு பகுதிகளில் […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like