கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- விஜயா தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 2️ வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விஜயா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் முருகன் விஜயாவை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் கொண்ட முருகன் நேற்று மாலை விஜயாவின் தாய் வீட்டிற்கு சென்று அங்கே விஜயாவை கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காலநிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர்.
அங்கே கத்தியுடன் இருந்த முருகனை பிடிப்பதற்கு முயற்சி செய்தபோது அவர் உதவி ஆய்வாளர் சத்தியசீலனை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மற்ற காவலர்கள் முருகனை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த உதவி ஆய்வாளர் சத்தியசீலன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.