ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42).இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ஹரி கிருஷ்ணனின் சகோதரர் பிரசாத் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார். சொந்த ஊருக்கு சென்றிருந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி வெங்கடசுமலதா(34), அவருடைய மகன் கன்னியா(12) உள்ளிட்டோர் நேற்று காலை மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
அறையின் கதவு வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்த காரணத்தாலும், நீண்ட நேரம் தட்டியும் திறக்காததாலும் பிரசாத் மற்றும் வார்டு பாய் வெங்கடேஷ் உள்ளிட்ட இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே மகள் கன்னிகா கருத்தில் துப்பட்டா இறுக்கமாக சுற்றப்பட்டு இருந்தது. வெங்கட சுமலதா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வார்டு பாய் வெங்கடேசனும், பிரசாத்தும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சமூக இடத்திற்கு வந்த கேகே நகர் காவல் துறையினர் இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், ஹரி கிருஷ்ணனின் உடல்நிலை முன்னேற்றம் இல்லாமல் இருப்பதால் விரக்தி அடைந்து, மகளை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, வெங்கடசுமலதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்திருக்கிறது.