ஆதீனங்கள் முன்னிலையில் புனித செங்கோலை மதுரையின் 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். இந்நிலையில், டெல்லி சென்ற 21 ஆதீன சுவாமிகள் அமைச்சர்கள் மற்றும் மற்ற ஆதீனங்கள் முன்னிலையில் புனித செங்கோலை மதுரையின் 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள் பிரதமர்நரேந்திர மோடியிடம் நேற்று வழங்கினார்.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், ஆதீனசெங்கோல் குறித்து பல கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஆதீன சுவாமிகள் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தால், லோக்சபா அறையில் மொத்தம் 1,280 உறுப்பினர்கள் இடம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.