கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு மாவட்டம் கூடு மங்களூருவை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி எனபவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மகனை மருத்துவமனைக்கு அழைத்துபக்கொண்டு செல்லும் வழியில் மகன் உயிரிழந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் அப்போதே சிறுவன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.
இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். மாரடைப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.