தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது தெற்கு வங்க கடல் பகுதிகளில் நேரில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
அதோடு மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.