1989 – 2014 க்கு இடையில் இரண்டு தசாப்தங்களாக நூற்றுக்கணக்கான நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்ட 74 வயதான முன்னாள் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் ஆவர். விசாரணையின் போது, அறுவை சிகிச்சை நிபுணர் தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற 74 வயதான முதியவர், இரண்டு மருமகள்கள் உட்பட நான்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஏற்கனவே 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் ஸ்கௌர்னெக்கு எதிராக, ஒரு 6 வயது சிறுமியின் பெற்றோர் புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. லெ ஸ்குவார்நெக் தனது வீட்டை ஒட்டி உள்ள வீட்டில் வாழும் அந்த சிறுமிக்கு எதிராக பாலியல் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு அவரது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாகவே விவாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் அந்த அறுவைச் சிகிச்சை நிபுணரான லெ ஸ்குவார்நெக்கின் வீட்டை சோதனை செய்தபோது, அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல ஆதாரங்களை பறிமுதல் செய்தனர், அவரது வீட்டில் இருந்து 3 லட்சத்திற்கு மேற்பட்ட புகைப்படங்கள், 650-க்கும் அதிகமான வீடியோக்கள், விலங்குகளுடன் பாலியல் தொடர்புடைய வீடியோக் கோப்புகள், மேலும், அவரது குற்றச் செயல்களை மிகவும்கொடூரமாக விவரிக்கும் குறிப்பேடுகள் மற்றும் தன்னை ஒரு பீடொபைலாக (சிறுவர் பாலியல் விருப்பம் கொண்ட நபராக) அவரே விவரித்துக் கொண்ட டைரிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
லு ஸ்கௌர்னெக் தனது குறிப்பேடுகளில் தனது செயல்களை, அவர் இலக்கு வைத்தவர்களின் பெயர்களுடன், மிக விரிவாக விவரித்திருந்தார், இது விசாரணையின் போது ஒரு முக்கியமான சான்றாக மாறியது. அறுவை சிகிச்சை நிபுணர், பாலியல் துஷ்பிரயோகத்தை மருத்துவ சிகிச்சையாக மறைத்து, மருத்துவமனை அறைகளில் தனியாக இருக்கும் நேரங்களில் இளம் நோயாளிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
விசாரணையின் போது, லு ஸ்கௌர்னெக் தனது குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்டார், ஆனால் அமைதியாகவும், உணர்ச்சியற்றவராகவும் இருந்தார் என்று கூறப்படுகிறது.”நான் அவர்களை மக்களாகப் பார்க்கவில்லை. அவர்கள் என் கற்பனைகளின் இலக்கு. விசாரணை தொடர்ந்தபோது, நான் அவர்களை உணர்ச்சிகள், கோபம், துன்பம் மற்றும் துயரத்துடன் தனிநபர்களாகப் பார்க்கத் தொடங்கினேன்,” என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார். “நான் உணர்ச்சிகளைக் காட்டுவதில்லை, நான் அப்படித்தான் இருக்கிறேன். நான் அதை உணரவில்லை என்று அர்த்தமல்ல, ஆனால் நான் அதை வெளிப்படுத்துவதில்லை,” என்று லு ஸ்கௌர்னெக் மேலும் கூறினார்.