அதிமுக மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவில் முதலமைச்சராக்கப்பட்ட பழனிசாமி, சசிகலா சிறைக்கு சென்றதும் அவரையும் கட்சியின் துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினரையும் கட்சியை விட்டே ஒதுக்கினார். பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு பொதுக்குழு மூலம் நீக்கி, எடப்பாடி, தன்னை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரியும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக தோல்வியுற்று வருவதால், அவரது தலைமை மீது நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் எம்.அருணகிரி, மாவட்ட எம்.ஜி.ஆய் அணி இணை செயலாளர் எஸ்.சண்முக பிரபாகரன், புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராமனை பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் குரோம்பேட் சதீஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வளையாபதி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜி.சந்திரசேகர ராஜாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read more: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என்னாச்சு..? ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தல்..!!