சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர எல்லைப் பாதை என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த விண்கலம் தற்போது பூமி சுற்றும் பாதையில் உள்ளது.
சந்திரயான்-3 கூறுகளில் நேவிகேஷன் சென்சார்கள், உந்துவிசை அமைப்புகள், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை உறுதி செய்வதற்கான பல்வேறு மின்னணு மற்றும் இயந்திர துணை அமைப்புகள் அடங்கும். கூடுதலாக, ரோவரை தரையிறக்குவதற்கான வழிமுறைகள், இருவழி தகவல் தொடர்பு தொடர்பான ஆண்டெனாக்கள் மற்றும் பிற ஆன்போர்டு எலக்ட்ரானிக்ஸ் உள்ளன.