மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவரது பயணத்தை முன்னிட்டு சென்னை மற்றும் மதுரையில் வைக்கப்பட்ட பேனர்கள், அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
“எங்க தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control தான்”, “டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது” போன்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. அப்போது அவர், “தமிழ்நாடு என்றைக்குமே டெல்லியின் ஆளுகைக்கு அடிபணியாது… அமித் ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் இங்கு ஆள முடியாது,” எனத் தாக்குமுகமாக பேசினார். இப்போது அவ்வார்த்தைகளே நகர வீதிகளில் பேனர்களாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், மதுரையில் இன்று பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள அமித் ஷா, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்சியின் அமைப்புகளை பலப்படுத்தும் திட்டங்களைப் பற்றி ஆலோசிக்கிறார்.
திமுகவின் கட்டுப்படுத்த முடியாத எதிர்ப்பு மற்றும் வீர வார்த்தைகளை பேனர்களாகக் கொண்டு வருவது, தமிழக அரசியலில் தீவிரமான போட்டியையும், புதிய அரசியல் ஆயுதங்களையும் காட்டுகிறது. இது போன்ற பேனர்கள், அமித் ஷாவின் வருகையை எதிர்த்து மெசேஜ் அரசியல் நடத்தப்படுவதை உணர்த்துகின்றன. இதன்மூலம், திமுக தனது நிலைப்பாட்டை கூறும் வகையில் பொதுமக்களுக்கு நேரடியாக இடம்பெயர்ச்சியில்லாத அரசியல் வார்த்தைகளை நினைவூட்ட முயற்சிக்கிறது.
Read more: இஸ்ரேல்-காசா போரினால் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளன.. மக்கள் சந்தித்த பாதிப்புகள் என்னென்ன..?