Alert: 14, 15-ம் தேதிகளில் அதி கனமழை எச்சரிக்கை… 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வரும் 15-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More: நெல் கொள்முதல் விலை உயர்வு.. விவசாயிகளுக்கு குட்நியூஸ் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..

Vignesh

Next Post

மருத்துவ உலகில் புதிய புரட்சி.. இனி இரத்த தட்டுப்பாடு என்ற வார்த்தையே இல்லாமல் போகும்..!! - ஜப்பான் விஞ்ஞானிகள் அசத்தல்

Fri Jun 13 , 2025
மருத்துவ உலகம் நீண்ட காலமாக எதிர்நோக்கிய பிரச்சனை முன்பதியில்லாத ரத்த தேவை. இதற்கு தீர்வாக, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக செயற்கை இரத்தம் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இரத்தம் அனைத்து ரத்த வகைகளுக்கும் பொருத்தமானது என்றும், பரிமாற்றத்திற்கு முன் ABO/Rh வகை பொருத்தம் பார்ப்பதைத் தவிர்க்கச் செய்யக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பெரிய அளவிலான உற்பத்தி மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சாதனைகள் இருந்தாலும், விரிவான பயன்பாட்டிற்கு இது இன்னும் […]
Artificial Blood

You May Like