முகத்தில் ஃபேஸ் பேக்.. கையில் புத்தகம்.. மெட்ரோ ரயிலில் பெண் செய்த செயல் இணையத்தில் வைரல்..!!

metro rail girl

டெல்லி மெட்ரோவில், ஒரு பெண் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு புத்தகம் படித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோவின் பொதுப் பெட்டியில் பயணம் செய்த பெண், யாரையும் தொந்தரவு செய்யாமல் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டு, ஒரமாக நின்று புத்தகம் படித்து வந்ததை வீடியோவில் காணலாம். இந்த வீடியோ, @thedopeindian என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. தற்போது இதற்கு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.


இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு பயனர், “மற்ற பயணிகள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் இருந்தார்; யாரையும் தொந்தரவு செய்யவில்லை” என பாராட்டியிருந்தனர். மற்றொரு பயனர், “இது வீடு இல்லை.. பொது இடம். இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என விமர்சித்துள்ளார். மேலும் சிலர், “இது கவனத்தை ஈர்க்கும் செயல், வீடியோவை வைரலாக்கும் நோக்கத்துடன் செய்திருக்கலாம்” எனக்கூறியுள்ளனர்.

அண்மையில், கூட்டமில்லாத டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் நுழைந்த இளம்பெண் ஒருவர், சக பயணிகள் முன்னிலையில் ஆபாச நடன அசைவுகளை ஆடி ரீல்ஸ் பதிவு செய்தார். இதனை கவனித்த சக பயணிகள் ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்க்கின்றனர். இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

மெட்ரோ ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள், ஒழுங்காகவும் மரியாதையுடனும் பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால், சில பயணிகள் மெட்ரோவைக் தங்களின் காட்சிக்கான மேடையாக மாற்றும் பழக்கத்தில் ஈடுபடுவதால், மற்ற பயணிகள் அதனை வருத்தத்துடன் பார்க்கின்றனர்.

இந்தச் செயல்கள், தனியுரிமை மற்றும் பொது ஒழுக்க விதிகளை மீறும் வகையில் உள்ளதாக, சமூகவலைதளங்களில் விவாதங்கள் உருவாகியுள்ளன.
சிலர், “பொது இடங்களில் தனிப்பட்ட செயற்பாடுகள் பரவலாக போதுமான கட்டுப்பாடின்றி நடப்பது, சமூக ஒழுங்கமைப்புக்கு கேள்விக்குறி எழுப்புகிறது” எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

Read more: எமனாக மாறிய பிரிட்ஜ்.. கம்ப்ரசர் வெடித்து கடையின் உரிமையாளர் உயிரிழப்பு..!! மயிலாடுதுறையில் சோகம்

Next Post

விமான விபத்து நடந்த பகுதியில் 1,000°C ஐ எட்டிய வெப்பநிலை.. பறவைகள், நாய்கள் கூட தப்பிக்க முடியல..

Fri Jun 13 , 2025
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான தளத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது. இது மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியது. மேலும் அப்பகுதிக்கு அருகில் உள்ள நாய்கள் மற்றும் பறவைகள் கூட சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத அளவுக்கு கடினமாக இருந்தது. மாநில பேரிடர் நிவாரணப் படை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ விபத்தின் தீவிரத்தைக் காட்ட அருகிலுள்ள நாய்கள் […]
AA1GDoYB

You May Like