முகவரியை மாற்றும் ராகுல்காந்தி.. மக்களவை எதிர்கட்சி தலைவருக்கு அரசு பங்களா ஒதுக்கீடு..!!

rahul gandhi

மக்களவை எதிர்கட்சி தலைவருக்காக அரசு ஒதுக்கிய பங்களாவுக்கு மாற ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார்.


மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டெல்லி துக்லக் லேன் சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தவர் ராகுல் காந்தி. 2023 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் பதவியை இழந்த ராகுல்காந்தி பங்களாவை காலி செய்து விட்டு தாயார் சோனியா காந்தியின் No.10 ஜன்பத் இல்லத்தில் வசித்து வந்தார்.

பின்னர், நீதிமன்றம் தகுதி நீக்கத்தை தற்காலிகமாக நிறுத்திய போதும், ராகுல் மீண்டும் தனி வீடு ஏற்கவில்லை. தனது தாயார் இல்லத்திலேயே தங்கியிருந்தார். ஆனால், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு புதிய அதிகாரப்பூர்வ அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் அந்தஸ்து வாய்ந்த பதவியாகத் தரப்படுவதால், எதிர்க்கட்சி தலைவருக்காக தனி பங்களா ஒதுக்குவது வழக்கமாகும். அதன்படி, டெல்லியில் உள்ள 5, சுனேரிபாக் சாலையில் அமைந்துள்ள உயர்நிலையான அரசு பங்களா, ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் உடைகள், அலமாரிகள், புத்தகங்கள் மற்றும் வேலைக்கு தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை மாற்றும் பணிகள் துவங்கி விட்டன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்பே, அவர் புதிய பங்களாவிற்கு குடியேறுவார் என்று தெரிகிறது.

Read more: ஷாக்!. 10,000க்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யும் Intel!. ஊழியர்கள் கதறல்!

Next Post

இஸ்ரேலுக்கு மிகப்பெரிய நிதி, இராணுவ ஆதரவாக இருக்கும் அமெரிக்கா!. என்ன காரணம்?. வெளியான புள்ளிவிவரங்கள்!.

Fri Jun 20 , 2025
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. எனினும், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் வழங்கவில்லை. இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ‘இஸ்ரேலின் இருப்புக்கே’ ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின் இரு நாடுகளும் பரஸ்பரம் […]
america israel

You May Like