இந்தியா தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் என பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீர் தகராறைத் தீர்க்கவும், சிந்து நதிப் படுகையின் ஆறு முக்கிய நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்ளவும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 இல் கையெழுத்தானது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
மேலும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 4 நாட்களாக நீடித்த சண்டை போராக மாறும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் (Indus Waters Treaty) ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்தது இந்திய அரசு. சமீபத்தில் இந்திய உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா, சிந்து நீதி நீர் ஒப்பந்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது திரும்பப்பெற மாட்டாது எனத் தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிலாவல் பூட்டோ-சர்தாரி, “இந்தியாவுக்கு இரண்டு ஆப்சன் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது. அல்லது நாங்கள் அனைத்து ஆறுகளில் (சிந்து நிதிப் படுகையில் உள்ள 5 ஆறுகள்) இருந்தும் தண்ணீரை திறந்து விடுவோம்.
சஸ்பெண்ட் முடிவை பின்பற்றுவோம் என இந்தியா மிரட்ட முடிவு செய்தால், நாங்கள் மீண்டும் போரை நடத்த வேண்டியிருக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், பயங்கரவாதம் குறித்து ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால், இரு நாடுகளிலும் வன்முறை தீவிரமடையும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தெற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானின் இந்த கருத்துக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.
Read more: 10 ஆம் வகுப்பு மாணவன் மீது இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை.. தலை நசுங்கி பரிதாப பலி..!!