மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1996 பிரிவு 34ன் படி, அரசு பணியில் இருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, பதவி உயர்வு வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், மாற்றுத்திறனாளி அலுவலர் ஒருவர், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று மாதத்திற்குள், 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என, 2023 ஜனவரியில் தீர்ப்பு அளித்தது. ஆனால், இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு வழங்குதல் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் விதிகளின்படி, மாநில அரசு, பொதுத்துறை ஊனமுற்றோரின் பதவி உயர்வுக்கான பதவிகளை அடையாளம் காணும் செயல்முறையை முடிக்க வேண்டும். பொதுத்துறை ஊனமுற்றோரால் வகிக்க ஏற்றதாக அடையாளம் காணப்பட்ட பதவிகள், சம்பந்தப்பட்ட துறையுடன் கலந்தாலோசித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 இன் பிரிவு 33 இன் படி அறிவிக்கப்படும்.
அவ்வப்போது வெளியிடப்படும் இந்த அறிவிப்புகள், பொதுத்துறை ஊனமுற்றோரின் பதவி உயர்வில் இடஒதுக்கீடு செய்வதற்கான இந்த வழிமுறைகளை செயல்படுத்தப் பயன்படுத்தப்படும். மேற்கூறிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகள், ஒவ்வொரு அரசு நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட நியமன அதிகாரிகளாலும் பொதுத்துறை ஊனமுற்றோரின் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்கு அமலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.