விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை பணத்தை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தின் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த வீரதுர்கா நீலிமா (26) என்பவர், திருமணம் முடிந்த பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் ஆண்கள் மீது பரிதாபம் காட்டும் போல் பழகி, நெருக்கம் காண்பித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன் வலையின் சிக்கவைப்பதை வாடிக்கையாக்கியுள்ளார்.
அன்பிற்காக ஏங்கி தவிக்கும் ஆண்களும், வீரதுர்கா நீலிமாவின் பேச்சில் எளிதாக மயங்கி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை கொடுத்து விடுகிறார்கள். தன் தேவை நிறைவேறியவுடன் அவர்களை கழற்றிவிட்டு சென்றுவிடுவாராம். நீலிமாவின் பெற்றோர் ராமகிருஷ்ணா மற்றும் வீரலட்சுமி, அத்துடன் அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாண் ஆகியோரும் இந்த மோசடிகளில் துணைபுரிந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சுமார் 12க்கும் மேற்பட்ட ஆண்களிடம் வீரதுர்கா நீலிமா கைவரிசை காட்டியுள்ளாராம். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், வீரதுர்கா நீலிமாவை கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வந்து மீண்டும் இதேபோல் பலரிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் வீரதுர்கா நீலிமாவில் லீலைகளில் சிக்கி பணத்தை இழந்த நரசாபுரம், பாலகொல்லு மற்றும் கோவ்வூரை சேர்ந்த 3பேர் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணாராவிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வீரதுர்கா நீலிமா, ராமகிருஷ்ணா, வீரலட்சுமி, கல்யாண் ஆகிறோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: இந்திய விமானி அபிநந்தன் வர்த்மானை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி என்கவுண்டர்..!!