7 கோடி PF பயனர்களுக்கு குட்நியூஸ்.. இனி UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்.. முழு விவரம் இதோ..

PF ATM Withdrawal

7 கோடி PF குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில், PF உறுப்பினர்களுக்கு EPFO ​​விரைவில் ஒரு நல்ல செய்தியை அறிவிக்க உள்ளது. PF உறுப்பினர்கள் தற்போது PF பணத்தை எடுப்பது மிகவும் எளிதாக மாறும். உங்கள் PF கணக்கின் ஒரு பகுதியை நீங்கள் கோரிக்கை விடுக்காமலே பயன்படுத்த முடியும். தற்போதைய சூழ்நிலையில், PF தொகை கோரப்பட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் பெறப்படும், ஆனால் EPFO அமைப்பு இதில் ​​விரைவில் புதிய மாற்றங்களைச் செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டவுடன் கோடிக்கணக்கான குடும்பங்கள் இந்த வசதியால் பயனடைவார்கள். புதிய விதிகளின் கீழ், UPI உடன் ATM டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுக்கலாம். இது நிச்சயம் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் இது 100% உண்மை என்று EPFO ​​வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய விதி அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ATM டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் முறை

PF ஊழியர்களுக்கு வசதி மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர, EPFO ​​விரைவில் UPI மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் விதியை செயல்படுத்த உள்ளது. தற்போது, ​​புதிய முறையை மேலும் எளிமையாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மென்பொருள் தொடர்பான சவால்கள் விரைவில் முடிவடையும், அதன் பிறகு இந்த புதிய விதி அமலுக்கு வரும்.

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கூற்றுப்படி, PF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை ஊழியருக்குச் சொந்தமானது, மேலும் அதை திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, பணியாளர் எந்த நேரத்திலும் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை தொகையைப் பயன்படுத்தலாம். EPFO 3.0 திட்டத்தின் படி பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மென்பொருள் தயாரானவுடன், PF ஊழியர்கள் தங்கள் நிதியை ATM-களிலிருந்தும் PI வழியாகவும் எடுக்க முடியும்.

தானியங்கி உரிமைகோரல் தீர்வு

இதனிடையே மத்திய அரசு, PF-ன் ஆட்டோ உரிமைகோரல் தீர்வுகளின் அளவை அதிகரித்துள்ளது. EPFO ​​ஆட்டோ உரிமைகோரல் தீர்வுத் தொகையை நேரடியாக ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. அதன்படி, இது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. தொகையை எடுக்க எந்த கைமுறை சரிபார்ப்பும் தேவையில்லை. இந்த அறிவிப்பால் கோடிக்கணக்கான PF பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளன. புதிய மாற்றத்தின் கீழ், விண்ணப்பப் படிவத்தை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள், மனித தலையீடு இல்லாமல், பணத்தை எடுக்கும் கோரிக்கைகள் மின்னணு முறையில் தீர்க்கப்படும் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது..

Read More : பேசுவதை ஒட்டுக்கேட்கும் சமூக வலைதளங்கள்.. ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை..!! தனியுரிமையை பாதுகாப்பது எப்படி..?

RUPA

Next Post

ஜூலை 7 முதல் 2026 ஜனவரி 30-ம் தேதி வரை... பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு...!

Thu Jun 26 , 2025
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ம் […]
School students 2025

You May Like