தமிழகமே..! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்… தமிழக அரசு முக்கிய முடிவு..! என்ன தெரியுமா..?

Ration 2025

ரேஷன் கடைகளுக்கு மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருகிறது

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ விற்று அதிக லாபம்‌ ஈட்டும்‌.நோக்கத்துடன்‌ செயல்பட்டு வருகின்றனர்‌.


உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ குடிமைப்‌ பொருள்‌ குற்றப்‌ புலனாய்வுத்‌ துறை அலுவலர்கள்‌ தொடர்‌ ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கலில்‌ ஈடுபடுவோர்‌ / உடந்தையாக செயல்படுவோர்‌ மீது, இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ சட்டம்‌,1955 மற்றும்‌ தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின்‌ கீழ்‌ வழக்கு பதிவு செய்து உரிய மேல்‌ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்‌.

தமிழகத்தில் 2 கோடியே 22 லட்சத்து 59,224 குடும்ப அட்டைகள் உள்ளன. 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 51,327 ஏற்கப்பட்டுள்ளன. 37,299 முழுநேர, பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் பொருட்களை பெறுவதற்காக 2 முறை கைவிரல் ரேகை வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதையும் ஒரே ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் பொருட்களை எளிதாக பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ‘புளூடூத்’ மற்றும் கேபிள் மூலம் தராசுகளை மின்னணு விற்பனை கருவியுடன் (எஸ்.ஓ.பி.) இணைத்து சரியான எடை வந்தால் மட்டுமே ரசீது போடப்படுவதால் ஏற்படும் காலதாமதத்தை தடுப்பதற்காக, இனி வரும் காலங்களில் ரேஷன் கடைகளுக்கு புதிதாக வாங்கப்படும் தராசுகள் தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருகிறது.

Read more: 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள்!. அவசர நிலை பிரகடனத்தை எதிர்கொண்ட இந்தியா!. இருளில் மூழ்கிய தேசம்!. பின்னணி இதோ!

Vignesh

Next Post

"ஏங்கக.. கூமாபட்டி தனி ஐலேண்டுங்க...!!" திடீரென ட்ரெண்ட் ஆன கிராமம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Thu Jun 26 , 2025
“ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க!” என இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு ரீல்ஸ் வீடியோவால், தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமமான கூமாபட்டி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாபட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கை சூழல் […]
koomapatti 2 2025 06 25 13 37 14 1

You May Like