முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.6000 ஓய்வூதியம்…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?

tn Govt subcidy 2025

நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 விதம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில்; விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- விதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறைந்தபட்ச தகுதியாக சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாம் இடம் / மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றத்தில் வேண்டும்.


மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச /தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்.

வயது வரம்பு:

2025 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும் தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருத்தல் வேண்டும். மாத வருமானம் விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/- ஆக இருத்தல் வேண்டும் (இதற்கான 2025-ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டும்) ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பித்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்த்திட வேண்டும். இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள் வயது மற்றும் அடையாள சான்றிதழ் (ஆதார்) பிறப்பிட சான்று, வருமான சான்று ஓய்வு பெற்றதற்கான விவரங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் 31.07.2025 மாலை 5 மணி வரை ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசி எண்.7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Read more: இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை!. இன்று உலக இசை தினம்!

Vignesh

Next Post

147 ஆண்டுகள் பழமை!. வெறும் ரூ.117க்கு விற்கப்படும் லண்டன் ராயல் ஹோட்டல்!. என்ன காரணம்?

Fri Jun 27 , 2025
ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டலைப் புதுப்பிக்க சுமார் ரூ.38 கோடி செலவழித்த சொத்து மேம்பாட்டாளர் இப்போது அதை வெறும் ஒரு பவுண்டுக்கு, அதாவது ரூ.117க்கு விற்கிறார். சொத்து மேம்பாட்டாளர் நயீம் பெய்மன் 2020 ஆம் ஆண்டு நார்தாம்ப்டன்ஷையரின் கெட்டெரிங்கில் உள்ள கிரேடு II லைஸ்டேட் ராயல் ஹோட்டலை சுமார் .26 கோடிக்கு வாங்கினார். 147 ஆண்டுகள் பழமையான இந்த ஹோட்டலை ஒரு ஆடம்பரமான திருமண மண்டபம், உணவகம், இரவு விடுதி […]
London Royal Hotel 11zon

You May Like