நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 விதம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில்; விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- விதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறைந்தபட்ச தகுதியாக சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாம் இடம் / மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றத்தில் வேண்டும்.
மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச /தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்.
வயது வரம்பு:
2025 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும் தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருத்தல் வேண்டும். மாத வருமானம் விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/- ஆக இருத்தல் வேண்டும் (இதற்கான 2025-ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டும்) ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பித்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்த்திட வேண்டும். இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள் வயது மற்றும் அடையாள சான்றிதழ் (ஆதார்) பிறப்பிட சான்று, வருமான சான்று ஓய்வு பெற்றதற்கான விவரங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் 31.07.2025 மாலை 5 மணி வரை ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசி எண்.7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
Read more: இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை!. இன்று உலக இசை தினம்!