Result : 11-ம் வகுப்பு மறுகூட்டல் & மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியீடு…!

Tn School students 2025

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது.


அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: நடிகர் கிருஷ்ணாவின் Whatsapp குழுவில் இருந்தவர்கள் யார்..? போலீஸ் கையில் லிஸ்ட்.. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்..!!

Vignesh

Next Post

உடலில் நகக் கீறல்கள்; கடித்து வைத்த கொடூரம்!. கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவியின் மருத்துவ பரிசோதனையில் பகீர் தகவல்!.

Sat Jun 28 , 2025
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதலாமாண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மருத்துவ அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து கூற்றுகளும் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் கடித்து வைத்த பற்களின் அடையாளங்கள், நகக் கீறல்கள் மற்றும் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு வங்க […]
kolkata gang rape 11zon

You May Like