இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம்…! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…!

புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம் வழங்குவது தொடர்பான விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

இந்த ஹெல்மெட்கள் பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய அமைப்பு) நிர்ணயித்த தரத்துடன் இருக்க வேண்டும். ஹெல்மெட் விதியுடன் கூடுதலாக, ஜனவரி 1, 2026 முதல் 50சிசி-க்கு மேல் இன்ஜின் திறன் அல்லது மணிக்கு 50 கி.மீ.க்கு மேல் அதிகபட்ச வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உள்ளிட்ட அனைத்து எல்2 வகை இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) பொருத்துவதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேம்படுத்தி சறுக்குவதை தடுக்கும்.

இந்த புதிய விதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரை மற்றும் ஆட்சேபனைகளை comments-morth@gov.in. என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். இதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கேரட் ஹல்வா முதல் விண்வெளி அனுபவங்கள் வரை!. பிரதமர் மோடி-சுபன்ஷு சுக்லா இடையேயான உரையாடலின் முக்கிய அம்சங்கள்!

Sun Jun 29 , 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, ​​விண்வெளியில் இந்தியாவின் கொடியை அசைத்ததற்காக அவரைப் பாராட்டினார். அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது. இந்த திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் பெக்கி விட்சன், இந்தியாவை சேர்ந்த சுபான்ஷூ […]
PM Modi and Subhanshu Shukla 11zon

You May Like