பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதனையடுத்து அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து நன்றி_மீண்டும் வராதீர்கள்!” என்ற வாசகத்துடன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இந்த பாஜக கூட்டினியில் இருந்து அதிமுக விலகுகிறது என்ற அறிவிப்பு வெளியனதை அடுத்து அதிமுகவினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், இதுகுறித்து எங்களுடைய தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று கூறினார். இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி முறிவை அதிமுகவினர் கொண்டாடுவதை போன்று, பாஜகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை திருநெல்வேலி பாஜக கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய பாஜக கட்சியினர் கொண்டாடினர். மாநில தலைவரே இந்த விவகாரம் குறித்து கருத்து சொல்லாமல் இருக்கும் நிலையில், பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியது பேசுபொருளாகியுள்ளது