நாளை 2 இடங்களில் நடைபெற இருந்த இபிஎஸ்ஸின் பிரச்சாரம் ரத்து.. இதுதான் காரணம்!

whatsappimage2021 02 19at186 1613745627

நாளை 2 இடங்களில் நடைபெறவிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் நாளை திருச்செங்கோடு, குமார பாளையம் சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் நாமக்கல், பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் இபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார்..


இந்த சூழலில் இபிஎஸ் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது.. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. அப்போது அதிமுக தேர்வு செய்த 3 இடங்களுக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது.. அந்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதிகள் என்பதால் அங்கு பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை 2 இடங்களில் நடைபெறவிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.. இபிஎஸ் பிரச்சாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டது.. எனவே நாளை குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் மேற்கொள்ளவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது..

பிரச்சாரம் நடைபெறுவதற்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் ரத்து செய்யப்பட்டது.. எனவே குமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளில் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 6-ம் தேதி நடைபெற இருந்த பிரச்சாரம் ந

மேலும் நெடுஞ்சாலையில் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது.. அதனடிப்படையில் தற்போது அதிமுகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.. மேலும் பட்டா இடத்தை தேர்வு செய்யுமாறும் அதிமுகவினருக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது..

Read More : யூ டியூபர் மாரிதாஸ் கைது.. கரூர் விவகாரத்தில் அவதூறு பரப்பியதால் நடவடிக்கை!

English Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami’s election campaign, which was scheduled to be held in 2 places tomorrow, has been canceled.

RUPA

Next Post

விருச்சிக ராசியில் நுழையும்செவ்வாய்; இந்த 5 ராசிகளுக்கும் பெரும் அதிர்ஷ்டம்! தலைவிதி மாறும்!

Sat Oct 4 , 2025
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய், விரைவில் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் நுழைய உள்ளது.. இந்த புனிதமான பெயர்ச்சி அக்டோபர் 27, 2025 அன்று நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமி, செல்வம், தைரியம் மற்றும் சக்தி ஆகியவற்றின் அதிபதியான செவ்வாய், ஐந்து மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ருச்சக ராஜயோகத்தில் நுழைவதால், வலுவடைகிறது. இந்த தனித்துவமான யோகத்தின் செல்வாக்கின் காரணமாக, பன்னிரண்டு ராசிகளில் சில குறிப்பிட்ட […]
Mars transited in Leo 11zon

You May Like