சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் விவரம்…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

Teachers School 2025

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்படுகிறது. அந்த முகாம்களில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கி உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக இத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை எமிஸ் தளத்தில் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி மாவட்டங்களில் ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின்படி மட்டுமே இனிவரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்த தவறு!. சர்வதேச அளவில் தடை விதிக்க வாய்ப்பு?'. வெளியான தகவல்!.

Mon Oct 13 , 2025
துபாயில் இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் சைகை செய்த தவறால், பாகிஸ்தான் அணியை ஐசிசி தடை செய்ய வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், இந்திய வீரர்களை நோக்கி “6-0” என்ற சைகை செய்தார். இது, இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் […]
U 19 Pakistan players ban

You May Like