கணவன் வீட்டில் இல்லாத நேரம்.. 3 குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்..!! கடைசியில் ட்விஸ்ட்..

affair running

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மீனவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இவரின் மனைவி வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க செல்வதாக மாமியாரிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.


ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவே இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வேலை பார்த்து வந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞருடன், மீனவரின் மனைவிக்கு தகாத உறவு இருந்துள்ளது. வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண் தனது கள்ளக்காதலுடன் ஓடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மீனவரின் மனைவியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் அவர் விடாப்பிடியாக பிடிவாதமாக இருந்தார். பின்னர் குழந்தைகளை பார்த்து மனம் மாறிய மீனவர் மனைவி, கணவருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more: Breaking : தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்..!

English Summary

When her husband is not at home.. Woman runs away with a thief, leaving behind 3 children..!

Next Post

Flash : தமிழ்நாட்டிலும் நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற சம்பவம்.. ரவுடி கருக்கா வினோத் செயலால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு..

Thu Nov 13 , 2025
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்த […]
karukkaa vinoth 1

You May Like