தமிழகமே…! ஹோட்டல் பணியாளர்கள் ரூ.500 செலுத்தி கட்டாயம் இந்த தடுப்பூசி செலுத்த வேண்டும்…! அரசு உத்தரவு

hotel vaccine 2025

உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌


தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு (Enteric Fever) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களுடைய கடையில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 செலுத்தி தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட சான்றிதழை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைத்து ஹோட்டல்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 2 ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசியையை செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2026 ஆம் ஆண்டுக்கான மகா மேளா எப்போது?. புனித நீராடும் தேதிகள் எவை?. 15 கோடி யாத்ரீகர்கள் பங்கேற்பு!. முழுவீச்சில் ஏற்பாடுகள்!.

Sun Nov 23 , 2025
பிரயாக்ராஜில் நடைபெறும் மக்மேளா பௌஷ் பூர்ணிமா அன்று தொடங்கி மகாசிவராத்திரி வரை தொடரும். இந்த காலகட்டத்தில் ஆறு முக்கிய நீராட்டு விழாக்கள் நடைபெறும். 2026 ஆம் ஆண்டில், மகா கும்பமேளா ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 வரை தொடரும். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் என்ற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தை சுற்றியே மகா கும்பமேளா […]
Magh Mela 2026

You May Like