உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் 1,522வது நாளை எட்டியுள்ளது. இந்த நீண்டகால மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்த வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரின் போது, உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில், போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டதாக கூறப்பட்டாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதன் காரணமாக மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது உக்ரைனில் உள்ள நிப்ரோ உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து 47 ஏவுகணைகள் மற்றும் சுமார் 600 டிரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா நடத்திய இந்த தாகுத்தலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

