வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீடு கட்டுவது முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை பல விதிகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக வீட்டை துடைக்கும் நேரமும் நாளும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சரியான முறையில் துடைப்பது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்றும், தவறான நேரத்தில் துடைப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வாஸ்து சாஸ்திரம் படி, வீட்டை துடைக்க சிறந்த நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. இது சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு வரும் நேரமாகும். இந்த நேரத்தில் துடைப்பது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து அமைதியும் மகிழ்ச்சியும் தரும் என நம்பப்படுகிறது. அதேபோல் சூரிய உதயத்திற்குப் பிறகும், நண்பகலுக்கு முன்பும் துடைப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ஆனால் சில குறிப்பிட்ட நாட்களில் வீட்டை துடைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக வியாழக்கிழமைகளில் துடைப்பது குரு பகவானை கோபப்படுத்தும் என்றும், இது வீட்டில் குறைபாடுகள் மற்றும் தடைகளை ஏற்படுத்தும் என்றும் ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் ஏகாதசி நாளில் வீட்டை சுத்தம் செய்வது குடும்பத்தில் எதிர்மறை விளைவுகளை அதிகரிக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.
துடைப்பதற்கான சரியான நேரத்தைப் பற்றி பேசும் போது, மதியம் நேரத்தில் துடைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. காரணம், அந்த நேரத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் வீட்டிற்குள் நுழையும் நேர்மறை ஆற்றல் குறையும் என நம்பப்படுகிறது. அதேபோல் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை துடைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என வாஸ்து நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், வீட்டை துடைக்கும் நேரம் மற்றும் நாளை சரியாக பின்பற்றினால் வீட்டில் செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.


