தமிழக சட்டப்பேரவை செயலலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கினார்.. கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார்..
கடந்த 2023-ம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு பெற்ற நிலையில், 3 ஆண்டு காலம் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.. அந்த வகையில் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை பணியாற்ற அவருக்கு கால அவகாசம் உள்ளது. ஆனால் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்..
தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் சீனிவாசன்.. இவர் தமிழ்நாட்டில் புதிதாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு, ஆட்சியின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தவெக அரசு பக்க பலமாக இருந்தார்..
மேலும் சட்டசபை விதிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் சீனிவாசன் வழங்கி இருந்தார்.. இந்த சூழலில் தான் புதிய அரசுக்கும் சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.. அவரின் இந்த ராஜினாமா தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..



