திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை என்ற இடத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி முடிவுந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதியது.. இந்த விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கார் மோதிய விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
அதே போல் உளுந்தூர்ப்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.. உளுந்தூர் பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஒரே பைக்கில் சென்ற 5 பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஜஸ்டின், புருனோ, ஆகிய இரு தனியார் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.. ஆலன், சுஜித், அஜய் ஆகிய 3 மாணவர்கள் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
சாலை விபத்து நடைபெற்ற மேட்டத்தூர் பகுதியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை ஒருவழி பாதையாக மாற்றி, சரி செய்யும் பணியில் ஈடுபட்ட நிலையில், நிலைமை சீரானது..
Read More : 16 பேர் பலி.. 37 பேர் காயம்..! போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு..!



