Breaking : பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! நாடு முழுவதும் அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் பீதி..!

earthquake 165333220 16x9 1

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள மிண்டனாவ் தீவில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 29 கி.மீ (18.02 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக GFZ கூறியது. மிண்டனாவ் தீவின் சரங்கனி நகருக்கு தென்மேற்கே சுமார் 21 கி.மீ தொலைவில், 65.7 கி.மீ (41 மைல்) ஆழத்தில் இரவு 7:42 மணிக்கு (1142 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதே பகுதியில் ஏற்பட்ட ஒரு தீவிர நிலநடுக்கம் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. இந்த நிகழ்வு நடந்து 3 வாரங்கள் கூட ஆகாத நிலையில், தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தை அடுத்து, உடனடி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

தெற்கு பிலிப்பைன்ஸைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், மிண்டனாவ்வின் பல பகுதிகளில் பெரும் சேதமும் ஏற்பட்ட சில வாரங்களிலேயே, அந்நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

RUPA

Next Post

Flash : ஒரே நாளில் 2 முறை உயர்வு.. நகைப்பிரியர்கள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை..!

Fri Jun 26 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
jewels nn

You May Like