100% வரி..! ஆப்பு வைத்த அமெரிக்கா..! விழிபிதுங்கும் இந்தியா, சீனா..!

trump 4

ரஷ்யா மற்றும் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் நாடுகளை இலக்காகக்கொண்டு, அமெரிக்க செனட் சபை புதிய தடைகள் சட்ட மசோதாவிற்கு 86-11 என்ற கணக்கில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போரில் மாஸ்கோவின் பொருளாதார வலிமையை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.


இந்த புதிய சட்டத்தின் வாயிலாக, குறிப்பிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் பெறுகிறார்.

குடியரசுக் கட்சியின் மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டல் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட இச்சட்டம், ரஷ்யா மட்டுமன்றி ஈரானின் எரிசக்தித் துறை மீதான தடைகளையும் 2031-ஆம் ஆண்டு வரை நீடிக்க வகை செய்கிறது. ரஷ்யாவின் எரிசக்தி வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் நாடுகளைத் தண்டிப்பதுடன், அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதும் கடுமையான தடைகளைச் சுமத்த இச்சட்டம் வழிவகுக்கிறது.

இதன் மூலம், அமெரிக்காவுடன் வர்த்தக உறவைத் தொடர்வதா அல்லது மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்ய எரிசக்தியை கொள்முதல் செய்வதா என்பதை தீர்மானிக்கும் நிலைக்குப் பிற நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதன்மை நாடுகளாக சீனா, இந்தியா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை உள்ளன. இச்சட்டம் இறுதி வடிவம் பெற்றால், இந்த 5 நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபரால் 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்க முடியும்.

அதேவேளையில், அதிபர் டிரம்ப் ஏற்கனவே தனது வர்த்தகக் கொள்கைகளில் சுங்க வரிகளை முதன்மை ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் சூழலில், இந்த புதிய மசோதா அவருக்கு மேலும் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குவது குறித்து ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். செனட் சபையின் பச்சைக்கொடியைத் தொடர்ந்து, இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகஸ்ட் 31 அன்று மீண்டும் கூடும் போது, இச்சட்டம் குறித்த அடுத்தகட்ட விவாதங்களும் வாக்கெடுப்பும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : மதுபோதையில் வீட்டுக்குள் போன காதலன்..!! அலறியடித்து ஓடிவந்த கள்ளக்காதலி..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Next Post

தமிழகம் வந்தார் அமித்ஷா..!! அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம்..!!

Sat Aug 8 , 2026
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் தமது நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை வந்த அவருக்கு, விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், பின்னர் கார் வாயிலாக ரமண […]
Amit Shah 2026

You May Like